Wednesday, 24 November 2010

நகரம் மறுபக்கம் - Exit எந்த பக்கம்...


இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முனாடிலய்ர்ந்தே சம பில்ட் up . சுந்தர் C ரொம்ப வருஷம் கழிச்சு டைரக்ட் பண்ண படம். சுந்தர் C & குஷ்பூ interview சன் நியூஸ் சேனல் ல பார்த்தேன். ரெண்டு பேரூம் ரொம்ப நல்ல படம், சீன் பி சீன் ரசிச்சு ரசிச்சு டைரக்ட் & ஸ்க்ரீன் ப்ளே பண்ணி இருக்கோம் நாங்க. அத உண்மைன்னு நம்பி தாங்க இந்த படத்த பார்த்தேன். ஆனா விதி ..... சரி படத்துக்கு போவோம் ....

ஒன்னும் புதுசா சொல்றதுக்கு இல்ல. வழக்கம்போல ரௌடி நல்லவனா மாற try பண்ற கதை தான். சுந்தர் C நடிச்ச தலைநகரம் பார்ட் 2 மாதிரி இருக்குது இந்த படம். அதுல செத்து போன சுந்தர் க இதுல திரும்பி உயிரோட வரா மாதிரி காமிசுட்ருந்தா கூட நல்லா இருந்துற்கும்.

பொதுவா சுந்தர் C படம் நாலே பாக்கு கலர் மண்டயோட தான் வருவாரு ஆனா ஒரு changeக்கு இந்த படத்துல சாதாரணமா வராரு. நம்ம கண்ணுக்கு அதுவே பெரிய ஆறுதல். முதல் சீன்லயே ஹீரோவ யாரோ குத்திடிறாங்க. அதுலேருந்து flashback  ஆரம்பிக்குது. பொதுவா நான் மொக்க படம் நிறைய பார்ப்பேன். ஆனா இந்த படம் ஆரம்பிச்சு 30 நிமிஷதுலய்யே நான் தூங்கிட்டேன் சாரி சுந்தர் c  என்ன தூங்க வச்சுட்டாரு. ஒரு பெருமைக்காக சொல்லைலைங்க ....வாடா (சுந்தர் c நடிச்ச படம்) படத்த 5 வாட்டி பார்த்தவங்க நான். என்னடா இவன் ஒரு பீத்தகலைன்னு நனைச்சுடாதீங்க..படத்துல வடிவேல் காமெடி தாங்க முடியல ...அவரு பக்கத்துல உக்காந்து கிச்சு கிச்சு மூட்டினஆ கூட சிரிப்பு வராது... Heroine பெயரு ஞாபகம் வரல ... ஆனா நல்ல பண்ணிஇருக்காங்க....இண்டர்வல் அப்புரம் படம் நல்லா இருக்கும்னு நனைச்சு, தூக்கம் வராம இருக்க ஒரு கப் சூப் குடிச்சுட்டு பார்க்க உட்கார்ந்தேன்...ஒரு சூப் வேஸ்ட் ஆனது தான் மிச்சம் .... தூக்கமும் போச்சு சூப் பும் போச்சு....
கால் செண்டர்ல வேலை பார்கறவங்க weekend ல தூக்கம் வராம ரொம்ப கஷ்டமா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்....